Monday, March 3, 2014

கரி நாள் என்றால் என்ன?
-----------------------------------------
தமிழ் பஞ்சாங்கங்களில் மட்டும் கரி நாள் என்றொரு விசயம் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் சௌரமான மாதங்கள் நடைமுறையில் கடைபிடிக்கப்படுகின்றன. இந்தியாவின் மற்ற பகுதிகளில் சந்திரமான மாதங்கள் நடைமுறையில் உள்ளன. சௌரம் என்றால் சூரியன் என்று பொருள். அதாவது சூரிய சஞ்சாரத்தின் அடிப்படையில் கணக்கிடப்படும் மாதங்கள் சௌரமான மாதங்களாகும். தமிழ் மாதங்கள் சௌரமான மாதங்களாகும்
தமிழ் மாதங்களின் ஒரு குறிப்பிட்ட தேதிகள் கரி நாட்களாக தமிழ் பஞ்சாங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.அந்த விவரம் கீழே தரப்பட்டுள்ளன.
சித்திரை - 6,15
வைகாசி – 7,16,17
ஆனி – 1,6
ஆடி – 2,10,20
ஆவணி – 2,9,28
புரட்டாசி – 16,29
ஐப்பசி – 6,20
கார்த்திகை – 1,4,10,17
மார்கழி – 6,9,11
தை – 1,2,3,11,17
மாசி – 15,16,17
பங்குனி – 6,15,19

கரி நாளை ‘மாத தியாஜ்ஜியம்’ என குறிப்பிடுவர். ‘தியாஜ்ஜியம்’ என்றால் ‘விலக்கப்பட வேண்டியது’ என்று பொருள். முகூர்த்த நூல்களில் லக்கின தியாஜ்ஜியம், வார தியாஜ்ஜியம், திதி தியாஜ்ஜியம், நட்சத்திர தியாஜ்ஜியம் என சுப காரியங்களுக்கு விலக்கப்பட வேண்டிய காலங்களை பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. அதுபோல் கரி நாள் என்பது மாத தியாஜ்ஜியமாகும். இந்த தியாஜ்ஜிய காலங்கள் எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டன என்பதற்கான விளக்கம் எந்த ஒரு ஜோதிட நூல்களிலும் கொடுக்கபடவில்லை.
உதாரணமாக அக்னி நட்சத்திரம் என்பது சூரிய சஞ்சாரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுவதாகும். அதாவது சூரியன் சில குறிப்பிட்ட பாகைகளில் செல்லும் நாட்கள் அக்னி நட்சத்திர நாட்களாக எடுத்துக்கொள்ளப்பட்டு, அந்நாட்களில் சுப காரியங்கள் தவிர்க்கபடுகின்றன. அது போல் கரி நாள் என்பதும் சூரிய சஞ்சாரத்தை அடிப்படையாக கொண்டதாகும்.
சித்திரை மாதம் முதல் தேதி சூரியன் தன் சஞ்சாரத்தை மேசத்தில் தொடங்குவான். நாளுக்கு ஒரு பாகை வீதம் சூரியன் ராசிகளில் நகர்ந்து செல்வான். சித்திரை 1ல் சூரியன் மேசம் 1 வது பாகையில் இருப்பான், சித்திரை 6ல் சூரியன் மேசம் 6 வது பாகையில் இருப்பான். அதாவது ராசி மண்டலத்தில் சூரியன் நகர்ந்து செல்லும் ஒரு சில பாகைகள் (டிகிரிகள்) அசுபத்தன்மையுடையதாக நம் ரிஷிகள் நிர்ணயித்திருக்கலாம் என்பது என்னுடைய யூகம் மட்டுமே முடிவல்ல.
தை மாதம் முதல் மூன்று நாட்களும் தமிழகத்தில் சூரியனுக்குரிய விழாவாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆனால் அந்த மூன்று நாட்களும் கரி நாட்களாக பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கரி நாட்கள் சூரிய சஞ்சாரத்தை அடிப்படையாக கொண்டதாகக்கருதலாம். எனவே கரி நாட்கள் என்பதை வெறும் தமிழ் தேதிகளாக கருதாமல், சூரியனின் சஞ்சார பாகைகளாக (டிகிரிகளாக) எடுத்துக்கொள்ளலாம்.
கரி நாட்களைப்போன்றதே தனிய நாட்களாகும். எனவே மேற்கண்ட விளக்கங்கள் தனிய நாட்களுக்கும் பொருந்தும்.
மாந்தி கணிதம்

ஒவ்வொரு நாளும் மாந்தி உதயமாகும் நேரம் கிழமைகளுக்கு தகுந்தவாறும், பகல், இரவு பொழுதுகளுக்கு தகுந்தவாறும் மாறுபடும். அதை கணிப்பது எப்படி என பார்ப்போம்.
பகல் நேர மாந்தி உதய நாழிகையைக்கணிக்க, நடப்பு கிழமை முதல் சனிக்கிழமை வரை எண்ணி வரும் எண்ணை நான்கால் பெருக்கி, பெருக்கி வந்த எண்ணிலிருந்து இரண்டை கழிக்க, அன்றைய கிழமை பகல் நேரத்திற்குரிய மாந்தி உதய நாழிகை கிடைக்கும். உதய நாழிகை என்பது காலை சூரிய உதயத்திலிருந்து கணிக்கப்படுவதாகும்.
எல்லா கிழமைகளுக்கும் பகல் நேர மாந்தி உதய நாழிகையை கணிப்போம். ஞாயிற்றுக்கிழமை முதல் சனிக்கிழமை வரை எண்ணினால் 7 வருகிறது, அந்த 7 ஐ 4 ஆல் பெருக்கினால் 7 * 4 = 28, அந்த 28 லிருந்து 2 ஐ கழித்தால் 28 – 2 = 26. எனவே ஞாயிற்றுக்கிழமை பகல் நேர மாந்தி உதய நாழிகை 26 நாழிகைகளாகும்.
திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை எண்ணினால் 6 வருகிறது, அந்த 6 ஐ 4 ஆல் பெருக்கினால் 6 * 4 = 24, அந்த 24 லிருந்து 2 ஐ கழித்தால் 24 - 2 = 22.எனவே திங்கள் கிழமை பகல் நேர மாந்தி உதய நாழிகை 22 நாழிகைகளாகும்.
செவ்வாய்க்கிழமை முதல் சனிக்கிழமை வரை எண்ணினால் 5 வருகிறது, அந்த 5 ஐ 4 ஆல் பெருக்கினால் 5 * 4 = 20, அந்த 20 லிருந்து 2 ஐ கழித்தால் 20 - 2 =18.எனவே செவ்வாய்க்கிழமை பகல் நேர மாந்தி உதய நாழிகை 18 நாழிகைகளாகும்.
புதன் கிழமை முதல் சனிக்கிழமை வரை எண்ணினால் 4 வருகிறது, அந்த 4 ஐ 4 ஆல் பெருக்கினால் 4 * 4 = 16, அந்த 16 லிருந்து 2 ஐ கழித்தால் 16 - 2 = 14.எனவே புதன் கிழமை பகல் நேர மாந்தி உதய நாழிகை 14 நாழிகைகளாகும்.
வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை எண்ணினால் 3 வருகிறது, அந்த 3 ஐ 4 ஆல் பெருக்கினால் 3 * 4 = 12, அந்த 12 லிருந்து 2 ஐ கழித்தால் 12 - 2 = 10.எனவே வியாழக்கிழமை பகல் நேர மாந்தி உதய நாழிகை 10 நாழிகைகளாகும்.
வெள்ளிக்கிழமை முதல் சனிக்கிழமை வரை எண்ணினால் 2 வருகிறது, அந்த 2 ஐ 4 ஆல் பெருக்கினால் 2 * 4 = 8, அந்த 8 லிருந்து 2 ஐ கழித்தால் 8 - 2 = 6.எனவே வெள்ளிக்கிழமை பகல் நேர மாந்தி உதய நாழிகை 6 நாழிகைகளாகும்.
சனிக்கிழமை முதல் சனிக்கிழமை வரை எண்ணினால் 1 வருகிறது, அந்த 1 ஐ 4 ஆல் பெருக்கினால் 1 * 4 = 4, அந்த 4 லிருந்து 2 ஐ கழித்தால் 4 - 2 = 2.எனவே சனிக்கிழமை பகல் நேர மாந்தி உதய நாழிகை 2 நாழிகைகளாகும்.
பகல் நேர மாந்தி உதய நாழிகைகள்
ஞாயிற்றுக்கிழமை - 26 நாழிகை
திங்கள்கிழமை - 22 நாழிகை
செவ்வாய்க்கிழமை - 18 நாழிகை
புதன் கிழமை - 14 நாழிகை
வியாழக்கிழமை - 10 நாழிகை
வெள்ளிக்கிழமை - 6 நாழிகை
சனிக்கிழமை - 2 நாழிகை
இரவு நேர மாந்தி உதய நாழிகையைக்கணிக்க, நடப்பு கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை எண்ணி வரும் எண்ணை நான்கால் பெருக்கி, பெருக்கி வந்த எண்ணிலிருந்து இரண்டை கழிக்க, அன்றைய கிழமை இரவு நேரத்திற்குரிய மாந்தி உதய நாழிகை கிடைக்கும்.
எல்லா கிழமைகளுக்கும் இரவு நேர மாந்தி உதய நாழிகையை கணிப்போம். ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை எண்ணினால் 3 வருகிறது, அந்த 3 ஐ 4 ஆல் பெருக்கினால் 3 * 4 = 12, அந்த 12 லிருந்து 2 ஐ கழித்தால் 12 - 2 = 10. எனவே ஞாயிற்றுக்கிழமை இரவு நேர மாந்தி உதய நாழிகை 10 நாழிகைகளாகும்.
திங்கள்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை எண்ணினால் 2 வருகிறது, அந்த 2 ஐ 4 ஆல் பெருக்கினால் 2 * 4 = 8, அந்த 8 லிருந்து 2 ஐ கழித்தால் 8 - 2 = 6.எனவே திங்கள் கிழமை இரவு நேர மாந்தி உதய நாழிகை 6 நாழிகைகளாகும்.
செவ்வாய்க்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை எண்ணினால் 1 வருகிறது, அந்த 1 ஐ 4 ஆல் பெருக்கினால் 1 * 4 = 4, அந்த 4 லிருந்து 2 ஐ கழித்தால் 4 - 2 = 2.எனவே செவ்வாய்க்கிழமை இரவு நேர மாந்தி உதய நாழிகை 2 நாழிகைகளாகும்.
புதன் கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை எண்ணினால் 7 வருகிறது, அந்த 7 ஐ 4 ஆல் பெருக்கினால் 7 * 4 = 28, அந்த 28 லிருந்து 2 ஐ கழித்தால் 28 - 2 = 26.எனவே புதன் கிழமை இரவு நேர மாந்தி உதய நாழிகை 26 நாழிகைகளாகும்.
வியாழக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை எண்ணினால் 6 வருகிறது, அந்த 6 ஐ 4 ஆல் பெருக்கினால் 6 * 4 = 24, அந்த 24 லிருந்து 2 ஐ கழித்தால் 24 - 2 = 22.எனவே வியாழக்கிழமை இரவு நேர மாந்தி உதய நாழிகை 22 நாழிகைகளாகும்.
வெள்ளிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை எண்ணினால் 5 வருகிறது, அந்த 5 ஐ 4 ஆல் பெருக்கினால் 5 * 4 = 20, அந்த 20 லிருந்து 2 ஐ கழித்தால் 20 - 2 = 18.எனவே வெள்ளிக்கிழமை இரவு நேர மாந்தி உதய நாழிகை 18 நாழிகைகளாகும்.
சனிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை எண்ணினால் 4 வருகிறது, அந்த 4 ஐ 4 ஆல் பெருக்கினால் 4 * 4 = 16, அந்த 16 லிருந்து 2 ஐ கழித்தால் 16 - 2 = 14.எனவே சனிக்கிழமை இரவு நேர மாந்தி உதய நாழிகை 14 நாழிகைகளாகும்.
இரவு நேர மாந்தி உதய நாழிகைகள்
ஞாயிற்றுக்கிழமை - 10 நாழிகை
திங்கள்கிழமை - 6 நாழிகை
செவ்வாய்க்கிழமை - 2 நாழிகை
புதன் கிழமை - 26 நாழிகை
வியாழக்கிழமை - 22 நாழிகை
வெள்ளிக்கிழமை - 18 நாழிகை
சனிக்கிழமை - 14 நாழிகை
மாந்தி ஸ்புடம் கணிக்கும் முறை
மாந்திஸ்புடம் என்பது ஒரு குறிப்பிட்ட தினத்தில் பகல் நேரத்திற்கு ஒன்றாகவும், இரவு நேரத்திற்கு வேறாகவும் இருக்கும்.
1 நாள் = 60 நாழிகை = 360 பாகை
1 பகல் = 30 நாழிகை = 180 பாகை
1 இரவு = 30 நாழிகை = 180 பாகை
பகல் நேர மாந்தி ஸ்புடத்தைக்கணிக்க , பகல் நேர மாந்தி உதய நாழிகையை 180 ஆல் பெருக்கி வரும் தொகையை, 30 ஆல் வகுக்க வரும் தொகையுடன் அன்றைய சூரிய ஸ்புடத்தை கூட்டினால் வருவது பகல் நேர மாந்தி ஸ்புடமாகும்.180 ஐ 30 ஆல் வகுத்தால் வருவது 6 ஆகும். எனவே பகல் நேர மாந்தி உதய நாழிகையை 6 ஆல் பெருக்கி அத்துடன் அன்றைய சூரிய ஸ்புடத்தை கூட்டினால் வருவது பகல் நேர மாந்தி ஸ்புடமாகும்.
பகல் நேர மாந்தி ஸ்புடம் = (பகல் நேர மாந்தி உதய நாழிகை * 6) + (அன்றைய சூரிய ஸ்புடம்)
எல்லா கிழமைகளுக்கும் பகல் நேர மாந்தி ஸ்புடம் கணிப்போம்.
ஞாயிற்றுக்கிழமை பகல் நேர மாந்தி ஸ்புடம் = (26 * 6) =156
=156 + (அன்றைய சூரிய ஸ்புடம்)
திங்கள்கிழமை பகல் நேர மாந்தி ஸ்புடம் = (22* 6) = 132
=132 + (அன்றைய சூரிய ஸ்புடம்)
செவ்வாய்க்கிழமை பகல் நேர மாந்தி ஸ்புடம் = (18*6)= 108 நாழிகை
=108 + (அன்றைய சூரிய ஸ்புடம்)
புதன் கிழமை பகல் நேர மாந்தி ஸ்புடம் = (14*6)= 84
= 84 + (அன்றைய சூரிய ஸ்புடம்)
வியாழக்கிழமை பகல் நேர மாந்தி ஸ்புடம் = (10*6)= 60
= 60 + (அன்றைய சூரிய ஸ்புடம்)
வெள்ளிக்கிழமை பகல் நேர மாந்தி ஸ்புடம் = (6*6)=36
= 36 + (அன்றைய சூரிய ஸ்புடம்)
சனிக்கிழமை பகல் நேர மாந்தி ஸ்புடம் = (2*6) = 12
=12 + (அன்றைய சூரிய ஸ்புடம்)

இரவு நேர மாந்தி ஸ்புடத்தைக்கணிக்க , இரவு நேர மாந்தி உதய நாழிகையை 180 ஆல் பெருக்கி வரும் தொகையை, 30 ஆல் வகுக்க வரும் தொகையுடன் அன்றைய சூரிய ஸ்புடத்தை கூட்டி, அத்துடன் 180 பாகையைக்கூட்டினால் வருவது இரவு நேர மாந்தி ஸ்புடமாகும்.180 ஐ 30 ஆல் வகுத்தால் வருவது 6 ஆகும். எனவே இரவு நேர மாந்தி உதய நாழிகையை 6 ஆல் பெருக்கி வரும் தொகையுடன் அன்றைய சூரிய ஸ்புடத்தை கூட்டி, அத்துடன் 180 பாகையைக்கூட்டினால் வருவது இரவு நேர மாந்தி ஸ்புடமாகும்.
இரவு நேர மாந்தி ஸ்புடம் = (இரவு நேர மாந்தி உதய நாழிகை * 6) + (அன்றைய சூரிய ஸ்புடம்) + 180
எல்லா கிழமைகளுக்கும் இரவு நேர மாந்தி ஸ்புடம் கணிப்போம்.
ஞாயிற்றுக்கிழமை இரவு நேர மாந்தி ஸ்புடம் = (10 * 6) = 60
= 60 + (அன்றைய சூரிய ஸ்புடம்) + 180
திங்கள்கிழமை இரவு நேர மாந்தி ஸ்புடம் = (6* 6) = 36
= 36 + (அன்றைய சூரிய ஸ்புடம்) + 180
செவ்வாய்க்கிழமை இரவு நேர மாந்தி ஸ்புடம் = (2*6) = 12 நாழிகை
= 12 + (அன்றைய சூரிய ஸ்புடம்) + 180
புதன் கிழமை இரவு நேர மாந்தி ஸ்புடம் = (26*6) = 156
= 156 + (அன்றைய சூரிய ஸ்புடம்) + 180
வியாழக்கிழமை இரவு நேர மாந்தி ஸ்புடம் = (22*6) = 132
= 132 + (அன்றைய சூரிய ஸ்புடம்) + 180
வெள்ளிக்கிழமை இரவு நேர மாந்தி ஸ்புடம் = (18*6) = 108
= 108 + (அன்றைய சூரிய ஸ்புடம்) + 180
சனிக்கிழமை இரவு நேர மாந்தி ஸ்புடம் = (14*6) = 84
= 84 + (அன்றைய சூரிய ஸ்புடம்) + 180
மேற்கண்டவாறு கணித்து வரும் பாகைகள் 360 க்கு மேல் இருந்தால், கணித்து வந்த பாகைகளிலிருந்து 360 பாகைகளை கழிக்க வேண்டும்.

Friday, May 10, 2013

பெயர் ஜோதிடம்-அறிமுகம்


பெயர் ஜோதிடம்-அறிமுகம்

மறைமுக ஞானங்களைத்தெரிந்துகொள்வதில் எனக்கு சிறு வயது முதலே ஆர்வம் இருந்தது.இளம் வயதில் நான் முதன்முதலில் கற்க முயன்ற  மறைமுக ஞானங்கள் எண் ஜோதிடமும்,பெயர் ஜோதிடமுமாகும்.நான் இளைஞனாக இருந்த காலத்தில்தான் எண் ஜோதிடமும்,பெயர் ஜோதிடமும் அதிக அளவில் பயன்பாட்டிற்கு வந்திருந்தது.அக்காலத்தில் தமிழிலோ,பிற இந்திய மொழிகளிலோ எண் ஜோதிடம் பற்றியோ,பெயர் ஜோதிடம் பற்றியோ எழுதப்பட்ட நூல்கள் கிடைப்பது அரிதாக இருந்தது. மேற்கத்திய நாடுகளை சேர்ந்தவர்களால் எழுதப்பட்ட ஆங்கில நூல்கள்தான் அக்காலத்தில் அதிகமாக கடைகளில் விற்பனையாகிக்கொண்டிருந்தன. அப்பொழுது எனக்கு ஆங்கில அறிவு குறைவுதான் என்றாலும் ஓரளவுக்கு புரிந்துகொள்ள முடியும். அந்த கால சூழ்நிலையில்  நான் மேற்கத்திய தேசத்தவரான கீரோ அவர்கள் எழுதிய எண் ஜோதிட நூல்களைப்படித்திருக்கிறேன்.

மேற்கத்தியவரான கீரோ அவர்கள் எழுதிய நூல்களைத்தான் இந்தியாவை சேர்ந்த எண் ஜோதிடர்கள் அக்காலத்தில் பயன்படுத்தி வந்தார்கள்,தற்காலத்திலும் பயன்படுத்தி வருகிறார்கள். இந்தியாவிலுள்ள காசி நகர பண்டிதர்களிடம் தான் கற்றுக்கொண்டதைத்தான், தன்னுடைய நூல்களில் எழுதியிருப்பதாக கீரோ குறிப்பிடுகிறார். காசிப்பண்டிதர்களிடம் கற்றுக்கொண்டதாக அவர் குறுப்பிடுவதால் ,நம் இந்திய மொழிகளில் ஒன்றான சமஸ்கிருதத்தில் அது சம்பந்தமான நூல்கள் இருக்கலாமென எனக்குத்தோன்றுகிறது. ஆனால் அத்தகைய நூலை எங்கே தேடுவது என்று எனக்குத்தெரியவில்லை.

எண் ஜோதிடம்,பெயர் ஜோதிடம் இவைகளைக்கற்றுக்கொள்ள தெளிவான நூல்களோ,வழிகாட்டுதல்களோ கிடைக்காத காரணத்தால்,அவைகளைக்கற்கும் ஆர்வம் எனக்கு குறைந்துபோய்விட்டிருந்தது. இதனால் நான் இந்திய முறை ஜோதிடக்கலையை கற்கத்தொடங்கிவிட்டேன். ஜோதிடக்கலையில் போதிய அளவிற்கு ஞானம் பெற்ற மன நிறைவு எனக்கு உண்டு. ஆனால் எண் ஜோதிடம்,பெயர் ஜோதிடம் போன்ற விசயங்களை ஆராய வேண்டுமென்ற எண்ணம் மட்டும் எனக்குள் நெடுங்காலமாக இருந்துகொண்டேயிருந்தது. இதனால் அதைப்பற்றிய தேடுதல்களும் எனக்குள் இருந்து வந்தன.

தற்காலத்தில் பெயர் ஜோதிடம் ஒரு வகையான தந்திர சாஸ்திரம் போல் பயன்படுத்தப்பட்டு வருவதை அறிய முடிகிறது. இதை வைத்துக்கொண்டு சிலர் லட்சக்கணக்கில்,கோடிக்கணக்கில் சம்பாதித்தும்விட்டார்கள். இதை ஏன் வெளிப்படையாக வைக்க யாரும் முன்வரவில்லை என்பதை இதன் மூலம் புரிந்துகொள்ளலாம். பெயர் ஜோதிடம் வெளிப்படுவதற்கு வித்திட்டவர்கள் பண்டிட் சேதுராமன் அவர்கள். அவர் எழுதிய நூல்கள் தமிழகம் மட்டுமின்றி வெளினாடுகளிலும் பிரபலமடைந்தது. பெயர் எண்களுக்கும் மந்திர சாஸ்திரத்திற்கும் தொடர்பு இருப்பதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். பெயர் ஜோதிடத்தை பயன்படுத்தும் முறைகளை வெளிப்படுத்தினாரே தவிர,அதற்குப்பின்னால் மறைந்திருக்கும் ரகசியங்களை அவர் வெளிப்படுத்தவில்லை. அவரைத்தொடர்ந்து பண்டிட் லக்ஷ்மிதாஸ் என்பவரும் தமிழில் பெயர் ஜோதிடம் பற்றி ஒரு நூல் எழுதியிருக்கிறார். இவர்களைத்தொடர்ந்து பலர் தமிழில் பெயர் ஜோதிடம் பற்றிய புத்தகம் எழுதியாகிவிட்டது. ஆனால் பெரிய அளவில் ரகசியங்கள் எதுவும் வெளிப்படுத்தப்படவில்லை.

ஜோதிடத்தில் கிரக காரகத்துவங்களைக்கொண்டு பலன் கூறும் முறை பன்னெடுங்காலமாக நடைமுறையில் இருந்துவருகிறது.ஒன்பது கிரகங்களுக்கும் உரிய காரகத்தன்மைகள் பல உள்ளன. காலத்திற்கேற்ப புதிய காரகத்தன்மைகள் அவ்வப்பொழுது கிரகங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த அடிப்படையில் எண்களையும்,எழுத்துக்களையும் கிரக காரகத்துவத்துடன் இணைத்திருக்கலாம் எனத்தோன்றுகிறது. ராசிகள்,நட்சத்திரங்கள்,கிரகங்கள் இவைகளுக்கு எழுத்துக்கள் ஒதுக்கப்பட்டிருப்பதை ஜோதிட நூல்களில் காணமுடிகிறது. ஆனால் அவைகளை எவ்வாறு பயன்படுத்துவது என்ற விவரம் எந்த நூல்களிலும் கொடுக்கப்படவில்லை.

மேற்கத்தியவரான கீரோ காசிப்பண்டிதர்களிடம் தான் கற்றுக்கொண்ட எண்ணியல் மற்றும் பெயரியல் சார்ந்த விசயங்களை,தான் பயன்படுத்தும் ஆங்கில மொழியமைப்பிற்கு தகுந்தவாறு மாற்றிக்கொண்டு,அதை நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்திப்பார்த்து,தான் பெற்ற அனுபவங்களை நூல்களாக எழுதி வெளியிட்டுள்ளார். கீரோ அவர்கள் இந்தியர்களிடம் கற்றுக்கொண்ட எண்ணியல் மற்றும் பெயரியல் கலை இந்தியாவில் வளர்ச்சி பெறவே இல்லை,அதன் மூல நூல்கள் முற்றிலுமாக அழிந்துபோயிருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. கீரோ அவர்கள் எழுதிய நூல்கள்தான் இந்த கலைகளுக்கு மூல நூல்களாக தற்காலத்தில் இருந்து வருகின்றன.தற்காலத்தில் இந்தியாவில் நடைமுறையில் இருந்துவரும் எண்ணியல் மற்றும் பெயரியல் கலை கீரோவின் நூல்களை அடியொட்டியே அமைந்துள்ளது.

கீரோ அவர்கள் தான் இந்தியர்களிடம் கற்றுக்கொண்டதாக கூறிக்கொண்டாலும்,அவர் தன் சொந்த கருத்துக்களையும் இணைத்தே நூல்களில் எழுதியிருக்கிறார். குறிப்பாக இந்தியர்கள் யுரேனஸ்,நெப்டியுன் போன்ற கிரகங்களை ஜோதிடத்தில் பயன்படுத்தவில்லை.ஆனால் கீரோ அவர்கள் 4ஆம் எண்ணிற்கு யுரேனஸையும்,7ஆம் எண்ணிற்கு நெப்டியூனையும் ஒதுக்கியுள்ளார். இந்தியர்கள் 4ஆம் எண்ணிற்கு ராகுவையும்,7ஆம் எண்ணிற்கு கேதுவையும் ஒதுக்கியுள்ளனர். ராகு,கேதுக்களைப்பற்றி அதிக விவரம் தெரியாததால் ஒருவேளை கீரோ அவர்கள் அவைகளை  யுரேனஸ்,நெப்டியுன் என எடுத்துக்கொண்டிருக்கலாம்.

தமிழ் மொழி எழுத்துக்களுக்கோ அல்லது வட மொழி எழுத்துக்களுக்கோ உரிய எண் மதிப்பீடுகள் நமக்கு கிடைக்காமல் போய்விட்டதால் பெயர் ஜோதிடத்தைப்பொருத்தவரை நாம் ஆங்கில எழுத்துகளையே பயன்படுத்தவேண்டிய கட்டாய சூழ்      நிலையில் உள்ளோம். எழுத்துக்களுக்கு எவ்வாறு எண் மதிப்பீடு செய்யப்பட்டது என்ற விவரம் கீரோவைத்தவிர வேறு யாருக்கும் தெரியாது,அவரும் அந்த ரகசியத்தை வெளியிடவில்லை. வட மொழியில் உள்ள மந்திர சாஸ்திர நூல்களில் அதற்குரிய வழிமுறைகள் இருக்கலாம் எனத்தோன்றுகிறது. வட மொழி அறிந்தவர்களால் மட்டுமே அதை ஆராய்ந்து அறிய முடியும்.

எண்ணும் எழுத்தும்

எண் ஜோதிடத்தில்  எழுத்துக்களுக்கு பல்வேறு எண் மதிப்பீடுகள் கொடுக்கப்பட்டுள்ளதை காணமுடிகிறது.அவற்றில் சால்டியன் முறையில் கொடுக்கப்பட்டுள்ள எண் மதிப்பீடுகளே பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுகிறது. நாமும் இந்நூலில் சால்டியன் முறை எண் மதிப்பீடுகளையே பயன்படுத்தியிருக்கிறோம். அதுதான் நடைமுறைக்கு சரியாக வருகிறது.சால்டியன் முறை எண் மதிப்பீடுகள் கீழே தரப்பட்டுள்ளன 

எழுத்து

A,I,J,Q,Y
B,K,R
C,G,L,S
D,M,T
எண்

1
2
3
4
  
எழுத்து

E,H,N,X
U,V,W
O,Z
F,P
எண்

5
6
7
8

பெயர் கூட்டு எண் கணக்கிடும் முறை

பெயர் ஜோதிடத்தை பொருத்தவரை ஒரு பெயரின் கூட்டு எண்ணைக்கண்டறிய வேண்டுமானால்,எந்த மொழிப்பெயராக இருந்தாலும் அப்பெயரை ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டுதான் அப்பெயரின் கூட்டு எண்ணை கணக்கிட வேண்டும்.
உதாரணமாக சிவதாசன்ரவி என்னும் பெயருக்கு கூட்டு எண்ணைக்கணக்கிடுவோம்.
SIVADASANRAVI
3161 4 1315 21 61

எழுத்து
எண்
S
3
I
1
V
6
A
1
D
4
A
1
S
3
A
1
N
5
R
2
A
1
V
6
I
1
கூட்டு எண்
35

















  
சிவதாசன்ரவி என்ற பெயரின் கூட்டு எண் 35 ஆக வருகிறது. இதை ஓரிலக்க எண்ணாக மாற்றினால் (3+5=8) 8 வரும். எண் 8 சனிக்குரியதாகும். இவ்வாறு கூட்டிவரும் ஓரிலக்க எண்ணிக்கிற்குத்தான் பெரும்பாலான நூல்களில் பலன் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் நாம் காணப்போகும் பெயர் ஜோதிட முறையில் பெயர் கூட்டு எண்ணை ஓரிலக்க எண்ணாக மாற்றக்கூடாது. அதை அப்படியே வைத்துக்கொண்டு பலன் கூறவேண்டும். இங்கே உதாரணமாக எடுத்துக்கொண்ட சிவதாசன்ரவி (SIVADASANRAVI)  என்னும் பெயரின் கூட்டு எண் 35, அதில் எண் 3 குருவிற்குரியதாகும்,எண் 5 புதனுக்குரியதாகும். எனவே எண் 35 ஆனது குரு,புதன் சேர்க்கையைக்குறிக்கும். குரு,புதன் சேர்க்கை சிறந்த கல்வியைக்கொடுக்கும். பேச்சாற்றல்,எழுத்தாற்றல் இவைகளைக்கொடுக்கும். இந்த பெயரை வைத்துக்கொண்ட பிறகுதான்,நான் எழுத்தாளராகவும்,பேச்சாளராகவும் மாறினேன்.

ஸௌந்தர்ய லஹரியில் பெயர் ஜோதிட ரகசியம்

பெயரின் கூட்டு எண்ணை ஓரிலக்க எண்ணாக மாற்றிக்கொண்டுதான் பலர் பலன் கூறிவந்தனர்.ஆனால் பண்டிட் சேதுராமன் அவர்கள் பெயரின் கூட்டு எண்ணை அப்படியே வைத்துக்கொண்டு பலன் கூறியிருக்கிறார்.அதாவது பெயரின் கூட்டு எண்கள் 10 முதல் 108 வரையுள்ள எண்களுக்கு தனித்தனியாகப்பலன் கூறியிருக்கிறார்.இதற்கு மந்திர சாஸ்திரத்தில் வழியிருப்பதாக குறிப்பிடுகிறார். இவர் மந்திர சாஸ்திரமென மறைமுகமாகக்குறிப்பிடுவது ஆதிசங்கரர் அருளிய "ஸௌந்தர்ய லஹரி" என்னும் நூலைத்தான்.இந்த ஸௌந்தர்ய லஹரியில்தான் பெயர் ஜோதிடத்தின் மர்ம முடிச்சு இருக்கிறது.இதை எதேச்சையாக ஆய்வு செய்தபோது,அதில் மறைந்துள்ள ரகசியங்கள் புரிந்தது. ஸௌந்தர்ய லஹரியை ஒரு பரிகார நூலாக காலம் காலமாகப்பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். கிரக தோஷ பரிகாரம்,கிரக சேர்க்கைப்பரிகாரம், இதில் தான் கூறப்பட்டுள்ளது என்பதை அண்மையில்தான் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

சௌந்தர்ய லஹரி என்பது 100 ஸ்லோகங்கள் அடங்கியஒரு தொகுப்பு. அதில் ஈசன் அம்பிகையின் புகழை பாடுவதாக ஸ்லோகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆதிசங்கரர் கைலாயம் சென்று பார்வதி பரமேஸ்வரனை தரிசித்தார், அப்போது ஈஸ்வரன் அவரிடம்  ஒரு சுவடி கட்டை கொடுத்தார்.  சுவடியில் அம்பாளை பற்றிய நூறு ஸ்லோகங்கள் இருந்தன.  ஸ்தோத்ர சுவடியை பெற்று கொண்ட ஆதிசங்கரரை நந்திகேஸ்வரர் வழி மறித்து அவர் கையில் இருந்த சுவடியை பிடித்து இழுத்தார்.  ஐம்பத்தி ஒன்பது ஸ்லோகங்களை நந்திகேஸ்வரர் தன்வச படுத்திக்கொண்டார். இழந்த ஐம்பத்தொன்பது ஸ்லோகங்களையும் கையில் இருக்கும் நாற்பத்தி ஒரு ஸ்லோகங்களை சேர்த்து 100 ஸ்லோகங்களாக பூர்த்தி செய்ய வேண்டும் என்பது அம்பாளின் விருப்பமாக இருந்ததால், ஆதிசங்கரர் அம்பிகையை கேசம் முதலாக பாதம் வரை வர்ணித்து பாடி 100 ஸ்லோகங்களையும் பூர்த்தி செய்தார்.

ஸௌந்தர்ய லஹரியில் உள்ள ஒவ்வொரு ஸ்லோகத்திற்கும் பரிகார பலன்களை கூறியிருக்கிறார்கள்.அந்த பரிகார பலன்களை படித்துப்பார்த்தால்,அவை பிருகு-நந்தி நாடியில் கூறப்படும் கிரக சேர்க்கைப்பலன்களை ஒத்திருக்கின்றன. எனவே ஜாதகத்தில் கிரக சேர்க்கையால் உண்டாகும் தோஷங்களுக்கு, ஸௌந்தர்ய லஹரியில் உள்ள ஸ்லோகங்களை பரிகாரத்திற்க்காக பாராயணம் செய்யலாம்.இந்த ஸ்லோகங்கள் எல்லாம் சமஸ்கிருத மொழியில் அமைந்துள்ளதால் சிலருக்கு அவைகளை உச்சரிப்பது கடினமாக இருக்கலாம். அத்தகைய சிரமம் உடையவர்கள் தங்கள் பெயரை குறிப்பிட்ட ஸ்லோக எண்ணுக்கு மாற்றி வைத்துக்கொண்டால்,அவர் அந்த கிரக சேர்க்கையால் உண்டாகும் தோஷங்களிலிருந்து விடுபடலாம். உதரணமாக ஒருவருக்கு,அவருடைய ஜாதகத்தில் சனி,கேது சேர்க்கை இருப்பதாக வைத்துக்கொள்வோம்.அந்த ஜாதகருக்கு சரியான தொழிலோ,உத்யோகமோ அமையாது,அப்படியே அமைந்தாலும் அது நீண்ட காலம் நிலைத்திருக்காது.இதற்கு பரிகாரமாக,ஸௌந்தர்ய லஹரியில் உள்ள 78 ஆவது ஸ்லோகத்தை  தொடர்ந்து பாராயணம் செய்துவந்தால் அவர் அந்த பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம்.அல்லது அவர் தன் பெயரின் கூட்டு எண் 78 வருமாறு அமைத்துக்கொண்டால் சனி,கேது சேர்க்கையால் உண்டாகும் தோஷங்களிலிருந்து விடுபடலாம்.

ஒருவருடைய பெயர் கூட்டு எண் எந்த கிரக சேர்க்கையைக்குறிப்பிடுகிறதோ, அந்த கிரக சேர்க்கைப்பலன்களை ஒருவர் தன் வாழ்நாளில் தொடர்ச்சியாக அனுபவித்து வருவதை  காண முடிகிறது.இந்த பலன்களுக்கும் ஒருவர் பிறந்த தேதிக்கும் சம்பந்தமில்லை என்பதையும் அறிய முடிகிறது.ஒருவருடைய ஜாதகத்தில் ஒரு குறிப்பிட்ட யோகம் இல்லையென்றாலும் தகுந்த பெயர் அமைப்பு மூலம் அந்த யோகத்தை அடைய முடியும் என்பதை ஆய்வில் அறிய முடிகிறது. 

Monday, February 6, 2012

KAVIPPU RASI


IF TRANSIT SUN IS POSITED IN VRISHABA,MITHUNA,KATAKA,SIMHA 





THEN TO FIND OUT KAVIPPU RASI  USE THIS TABLE-I








Uhayam Mesha Vrishaba Mithuna Kataka Shima Kanni Thula Vrichika Dhanush Makara Kumba Meena














Arudam
Kavippu Kavippu Kavippu Kavippu Kavippu Kavippu Kavippu Kavippu Kavippu Kavippu Kavippu Kavippu
Mesha
Mesha Vrishaba Mithuna Kataka Shima Kanni Thula Vrichika Dhanush Makara Kumba Meena
Vrishaba
Meena Mesha Vrishaba Mithuna Kataka Shima Kanni Thula Vrichika Dhanush Makara Kumba
Mithuna
Kumba Meena Mesha Vrishaba Mithuna Kataka Shima Kanni Thula Vrichika Dhanush Makara
Kataka
Makara Kumba Meena Mesha Vrishaba Mithuna Kataka Shima Kanni Thula Vrichika Dhanush
Shima
Dhanush Makara Kumba Meena Mesha Vrishaba Mithuna Kataka Shima Kanni Thula Vrichika
Kanni
Vrichika Dhanush Makara Kumba Meena Mesha Vrishaba Mithuna Kataka Shima Kanni Thula
Thula
Thula Vrichika Dhanush Makara Kumba Meena Mesha Vrishaba Mithuna Kataka Shima Kanni
Vrichika
Kanni Thula Vrichika Dhanush Makara Kumba Meena Mesha Vrishaba Mithuna Kataka Shima
Dhanush
Shima Kanni Thula Vrichika Dhanush Makara Kumba Meena Mesha Vrishaba Mithuna Kataka
Makara
Kataka Shima Kanni Thula Vrichika Dhanush Makara Kumba Meena Mesha Vrishaba Mithuna
Kumba
Mithuna Kataka Shima Kanni Thula Vrichika Dhanush Makara Kumba Meena Mesha Vrishaba
Meena
Vrishaba Mithuna Kataka Shima Kanni Thula Vrichika Dhanush Makara Kumba Meena Mesha














IF TRANSIT SUN IS POSITED IN MEENA,MESHA,KANNI,THULA 






THEN TO FIND OUT KAVIPPU RASI  USE THIS TABLE-II








Uhayam Mesha Vrishaba Mithuna Kataka Shima Kanni Thula Vrichika Dhanush Makara Kumba Meena














Arudam
Kavippu Kavippu Kavippu Kavippu Kavippu Kavippu Kavippu Kavippu Kavippu Kavippu Kavippu Kavippu
Mesha
Vrishaba Mithuna Kataka Shima Kanni Thula Vrichika Dhanush Makara Kumba Meena Mesha
Vrishaba
Mesha Vrishaba Mithuna Kataka Shima Kanni Thula Vrichika Dhanush Makara Kumba Meena
Mithuna
Meena Mesha Vrishaba Mithuna Kataka Shima Kanni Thula Vrichika Dhanush Makara Kumba
Kataka
Kumba Meena Mesha Vrishaba Mithuna Kataka Shima Kanni Thula Vrichika Dhanush Makara
Shima
Makara Kumba Meena Mesha Vrishaba Mithuna Kataka Shima Kanni Thula Vrichika Dhanush
Kanni
Dhanush Makara Kumba Meena Mesha Vrishaba Mithuna Kataka Shima Kanni Thula Vrichika
Thula
Vrichika Dhanush Makara Kumba Meena Mesha Vrishaba Mithuna Kataka Shima Kanni Thula
Vrichika
Thula Vrichika Dhanush Makara Kumba Meena Mesha Vrishaba Mithuna Kataka Shima Kanni
Dhanush
Kanni Thula Vrichika Dhanush Makara Kumba Meena Mesha Vrishaba Mithuna Kataka Shima
Makara
Shima Kanni Thula Vrichika Dhanush Makara Kumba Meena Mesha Vrishaba Mithuna Kataka
Kumba
Kataka Shima Kanni Thula Vrichika Dhanush Makara Kumba Meena Mesha Vrishaba Mithuna
Meena
Mithuna Kataka Shima Kanni Thula Vrichika Dhanush Makara Kumba Meena Mesha Vrishaba
IF TRANSIT SUN IS POSITED IN VRICHIKA,DHANUS,MAKARA,KUMBA 





THEN TO FIND OUT KAVIPPU RASI  USE THIS TABLE-III








Uhayam Mesha Vrishaba Mithuna Kataka Shima Kanni Thula Vrichika Dhanush Makara Kumba Meena














Arudam
Kavippu Kavippu Kavippu Kavippu Kavippu Kavippu Kavippu Kavippu Kavippu Kavippu Kavippu Kavippu
Mesha
Mithuna Kataka Shima Kanni Thula Vrichika Dhanush Makara Kumba Meena Mesha Vrishaba
Vrishaba
Vrishaba Mithuna Kataka Shima Kanni Thula Vrichika Dhanush Makara Kumba Meena Mesha
Mithuna
Mesha Vrishaba Mithuna Kataka Shima Kanni Thula Vrichika Dhanush Makara Kumba Meena
Kataka
Meena Mesha Vrishaba Mithuna Kataka Shima Kanni Thula Vrichika Dhanush Makara Kumba
Shima
Kumba Meena Mesha Vrishaba Mithuna Kataka Shima Kanni Thula Vrichika Dhanush Makara
Kanni
Makara Kumba Meena Mesha Vrishaba Mithuna Kataka Shima Kanni Thula Vrichika Dhanush
Thula
Dhanush Makara Kumba Meena Mesha Vrishaba Mithuna Kataka Shima Kanni Thula Vrichika
Vrichika
Vrichika Dhanush Makara Kumba Meena Mesha Vrishaba Mithuna Kataka Shima Kanni Thula
Dhanush
Thula Vrichika Dhanush Makara Kumba Meena Mesha Vrishaba Mithuna Kataka Shima Kanni
Makara
Kanni Thula Vrichika Dhanush Makara Kumba Meena Mesha Vrishaba Mithuna Kataka Shima
Kumba
Shima Kanni Thula Vrichika Dhanush Makara Kumba Meena Mesha Vrishaba Mithuna Kataka
Meena
Kataka Shima Kanni Thula Vrichika Dhanush Makara Kumba Meena Mesha Vrishaba Mithuna